பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான ஆண்களுக்கான உலகின் முதலாவது புரட்சிகர நிலையம் சுவீடனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களை பராமரிப்பதில் பாலியல் சமத்துவம் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலேயே சொடர்ஸ்ஜுஹுஸெட் என்ற மேற்படி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுவீடனில் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கான நிலையம் ஏற்கனவே திறந்துவைக்கப்பட்டுள்ளது. அந்த நிலையத்தில் வருடாந்தம் 600-–700 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்வுள்ளதாக தெரிவித்த சுவீடன் லிபரல் கட்சியின் பேச்சாளர் ரஸ்முஸ் ஜொன்லன்ட், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்களுக்கான சிகிச்சை நிலையத்தைத் தொடர்ந்து ஆண்களுக்கான முதலாவது சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்துள்ளதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.