பேஸ்புக் விபரீதம் – திருமணமான ஒரே மாதத்தில் தமிழ் பெண் தற்கொலை!!

347

facebook

பேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் செய்த விளையாட்டு விபரீதமாகி ஒரு பெண்ணை தூக்கில் தொங்கவைத்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. நாகப்பட்டினம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த ரமேஷ்பாபுவுக்கும் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அனு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

தற்போது ஆடி மாதம் என்பதால் சென்னைக்கு வந்துள்ளார் அனு. அனுவின் பேஸ்புக் பக்கங்களை ரமேஷ் பாபு பார்த்த போது அவர் வேறு ஒரு இளைஞருடன் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இது தொடர்பாக நடந்த பஞ்சாயத்தில் தம்முடன் வேலை பார்த்த ஒரு இளைஞர்தான் அப்படியான ஒரு புகைப்படத்தை உருவாக்கி போட்டிருக்கிறார் என்று விளக்கமாக கூறியிருக்கிறார்.

ஆனால் ரமேஷ்பாபுவுக்கு சந்தேகம் தொடர்ந்துள்ளது. இதனால் மனம் உடைந்த அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.