நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
ஜென்காவின் விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும், அத்துடன் அவர் இலங்கையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார்.
மேலும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.