கொண்டைய்யாவுக்கு பிணை – இரு வழங்குகளில் இருந்து விடுவிப்பு!!

1252

1691896055Untitled-1

கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்தவுக்கு பிணை வழங்கி கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இரண்டு வழங்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழங்கில் கைதாகி, பின்னர் குற்றத்தை தானே செய்ததாக ஒப்புக் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இவரது மரபணு சிறுமியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுவுடன் ஒத்துப் போகவில்லை. அத்துடன் கொண்டைய்யாவின் சகோதரர் சமன் ஜெயலத் என்பவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப்போனது.

இதனையடுத்து கொண்டைய்யா குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.