வவுனியாவில்மா.சபை உறுப்பினர் இந்திரராசாவினால் கல்வித்துறைக்கு 1300000 நிதி ஒதுக்கீடு!!

297

2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் வவுனியா தெற்கு வலய பாடசாலைகள் முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக காரியாலயப் பொருட்கள், தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், துவிச்சக்கர வண்டி கொள்வனவு மற்றும் திருத்த வேலைகளுக்கென 13 00 000/= ரூபா வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களால் ஒதுக்கப்பட்டது.

அவ்வொதுக்கீட்டுக்குரிய பொருட்கள் மற்றும் காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வு 17.10.2015 அன்று காலை 9.00 மணியளவில் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவக மாநாட்டு மண்டபத்தில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா தலைமையில் நடை பெற்றது.

இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

வடமாகாண சபை உறுப்பினர்களான G.Tலிங்கநாதன், ம.தியாகராசா, M.P.நடராசா, A.D.தர்மபாலசெனவிரத்ன, A.ஜெயதிலக ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டுக்குரிய பொருட்கள் காசோலைகள் என்பனவும் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

12178971_921993024536781_1334818162_n 12179151_921993011203449_227860401_n SAM_0005 SAM_0008 SAM_0012 SAM_0018 SAM_0020 SAM_0033 SAM_0035 SAM_0037 SAM_0040 SAM_0041 SAM_0044 SAM_0061 SAM_0062 SAM_0063