இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை வகிக்கிறது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோஹ்லி 140 பந்துகளில் 138 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கோஹ்லி அடிக்கும் முதல் சதம் ஆகும். மேலும் ரெய்னா 53, ரகானே 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தென்னாபிரிக்க அணி பந்துவீச்சில் ரபடா, ஸ்டெயின் தலா 3 வீக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 300 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தென்னாபிரிக்க அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 112 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 3, ஹர்பஜன் 2, மோகித்சர்மா, அக்சர் பட்டேல், மிஸ்ரா தலா ஒரு விக்கெட் விழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது போட்டி வரும் 25ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.