தலையில் இரும்புப் பொருள் தாக்கியதாலும் இளவரசன் இறந்திருக்கலாம்- பிரேதப் பரிசோதனை அறிக்கை!!

408

ilavarasan

தலையில் பலமான இரும்புப் பொருள் தாக்கியதாலும் கூட தர்மபுரி இளவரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மறு பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவைக் கொண்டு மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த டாக்டர்கள் குழு மறு பிரேதப் பரிசோதனையை நடத்தியது.

இதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இளவரசனின் தந்தையிடமும் அந்த அறிக்கை வழங்கப்பட்டது. அதில், இளவரசனின் தலையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கிறது.

ரயில் மோதியதால் இந்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கனமான இரும்பு பொருள் தாக்கியதாலும் இறந்திருக்கலாம். அதேசமயம் உடலில் வேறு எந்த காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.