கடந்த 20.10.2015 வவுனியா மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்ட சித்திவினாயகர் ஆலயத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு. மயில்வாகனம் .தியாகராசா அவர்களினால் நிதி உதவி வழங்கப்பட்டது
வவுனியா பகுதியிலே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத் திட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு ஒர் ஆலயம் அமைப்பதற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு. மயில்வாகனம்.தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய பரிபாலன சபைதலைவரிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் கலச்சாரத்திணைக்கள கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ.நித்தியானந்தம் மற்றும் ஆலய பரிபாலனசபை செயலாளர் அங்கத்தவர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங் மாதர் அபிவிருத்திச்சங் அங்கத்தவர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.