தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை!!

479

Salary

தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை இரண்­டா­யி­ரத்து ஐந்நூறு ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. சென­வி­ரத்ன தெரி­வித்தார்.

தேசிய தொழில் பாது­காப்பு வாரத்­தை­யொட்டி தொழில் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்..

அரச ஊழி­யர்­க­ளுக்கு கடந்த கால கட்­டங்­களில் பல சந்­தர்ப்­பங்­களில் சம்­பள அதி­க­ரிப்பு வழங்கப்பட்­ட­போதும் தனியார் துறை­யி­ன­ருக்கு அந்த சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை.
இதனால் அவர்கள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ளமையால் அவர்­க­ளுக்கு 2 ஆயி­ரத்து 500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுப்பேன்.



தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை 2500 ரூபாவால் அதி­க­ரிக்­கு­மாறு தனியார் துறை­யி­ன­ரிடம் பல தட­வைகள் கோரிக்கை விடுத்தபோதும் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. தனியார் துறையின் சில நிறுவ­னங்கள் மாத்­தி­ரம்தான் அரசின் கோரிக்­கையை ஏற்றுக்கொண்­டன.

இதன் அடிப்­ப­டையில் சில முத­லா­ளிமார் 1000 ரூபா­வி­னாலும் மேலும் சில நிறு­வ­னங்கள் 500 ரூபா­வி­னாலும் சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுத்­துள்­ளனர்.

ஆகை­யினால் விசேட சட்­ட­மூலம் ஒன்றின் மூலம் இந்த சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். அதே­போன்று தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம் என்றார்.