இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை புறக்கணிப்போம் : பாகிஸ்தான் எச்சரிக்கை!!

246

Pak

இந்­திய கிரிக்கெட் அணி எங்­க­ளுடன் விளை­யா­டா­விட்டால் அடுத்த வருடம் இந்­தி­யாவில் நடைபெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணப் போட்­டி­களை புறக்­க­ணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது.

எங்­க­ளுடன் செய்து கொண்ட ஒப்­பந்­தப்­படி இந்­திய கிரிக்கெட் அணி (டிசம்­பர்–­ஜ­ன­வ­ரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்­க­ணித்து விடுவோம் என்று தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்­டியில்..

பாகிஸ்­தா­னுடன் கிரிக்கெட் போட்­டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்­து­வித வாய்ப்புகளையும் இந்­தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறி­வு­ரையை கேட்டு அடுத்­த­கட்ட முடிவெடுப்போம்.

அப்­ப­டி­யொரு சூழலில் இந்­தி­யாவில் நடக்கும் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்தில் பங்­கேற்க வேண்டாம் என்றே எங்­க­ளது அரசு அறிவுறுத்தும் என்றே நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.