இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி (டிசம்பர்–ஜனவரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்கணித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில்..
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்துவித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்தகட்ட முடிவெடுப்போம்.
அப்படியொரு சூழலில் இந்தியாவில் நடக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வேண்டாம் என்றே எங்களது அரசு அறிவுறுத்தும் என்றே நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.