பிரான்சின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் ரோஸ் ரொபின்சன் எனும் பெண்மணி, காலி சிறைச்சாலை சுற்றுச் சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பொதுமக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மற்றும் கராப்பிட்டிய சிறுவர் மருத்துவமனை போன்றவற்றை தனது ஓவியங்களால் அழகுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில் காலி சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொண்ட வேண்டுகோளின் பேரில் அவர் தனது குழுவினருடன் தற்போது காலி சிறைச்சாலை சுற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் வகையில் ஓவியங்கள் தீட்டும் பணியை ஆரம்பித்துள்ளார்.