வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து தோணிக்கல் அம்மன் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்களை வழங்கினார்.
மேலும் வேப்பங்குளம் சனசமூக நிலையத்திற்கு நூலகத்திற்கான தளபாடங்களும் வழங்கப்பட்டது.
வவுனியா உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் 26.10.2015 அன்று நடைபெற்ற இன் நிகழ்வில் சனசமூக நிலைய தலைவர் செயலாளரிடம் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ம.தியாகராசா அவர்கள் மற்றும் வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.P.M.A.அசங்ககாஞ்சனகுமார (P.M.A.Asankakanchanakumara) ஆகியோர் வழங்கினர். இன் நிகழ்வில் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.