நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (28.10) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.