இந்திய கிரிக்கட் வீரர் அமித் மிஸ்ரா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!!

276

Misra

இந்திய கிரிக்கட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த மாதம் இந்திய கிரிக்கட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூரில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த தோழியை தாக்கியுள்ளார்.

இதில் தான் தாக்கப்பட்டதாக மிஸ்ராவின் பெண் தோழி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய பொலிசார், மிஸ்ராவின் மீது வழக்குப்பதிவு செய்து, ஒரு வாரத்துக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மிஸ்ராவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அமித் நேற்று பெங்களூர் பொலிசார் முன்பு ஆஜரானார். இதன்போது காலை 10.45 மணி முதல் 3 மணிநேரம் பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு பொலிசார் அவரை கைது செய்து சிறிது நேரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.