சூர்யாவின் அடுத்த படம் : தொடரும் குழப்பம்!!

340

Suryaசிங்கம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சிங்கம் 2வை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் லிங்குசாமி இயக்கும் படம் என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து இரண்டு படங்களுக்கும் சிக்கல் மேல் சிக்கல். கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த துருவ நட்சத்திரம் படம் கைவிடப்பட்டு விட்டது என்கிறது கோடம்பாக்கம்.

ஆனால் கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்திலேயோ சூர்யாவும் நானும் இணைந்து ஒரு நல்ல படத்தைத் தர திட்டமிட்டுள்ளோம்.அதுகுறித்து யோசித்து வருகிறோம். என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து லிங்குசாமி படத்திற்கும் பிரச்சனை தான். இயக்குனர் சங்கத்தில் சீமான் தனது பகலவன் கதையும், லிங்குசாமி சூர்யாவுக்காக தயார் செய்த கதையும் ஒன்றே என்று புகார் செய்து இருக்கிறாராம். இதனால் இப்படமும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

லிங்குசாமி தரப்போ ஒகஸ்ட் 21ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்து வருகிறது. ஆனால் சூர்யா தரப்பில் இருந்து அடுத்த படம் இது தான் என்கிற அறிவிப்பு வரவில்லை.

அதற்குள் கார்த்தி நடித்து வரும் “ஆல் இன் ஆல் அழகுராஜா” படத்தினைத் தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் ராஜேஷ் என்கிற தகவல் தான் இன்றைய பேச்சு.

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் கெளதம் மேனன், லிங்குசாமி, ராஜேஷ் ஆகியோரை தொடர்ந்து இப்பட்டியலில் இணையப் போவது யாரோ தெரியவில்லை.