ஒலிம்பிக் பதக்க கனவை நனவாக்குவோம்- விளையாட்டுத்துறை அமைச்சர்!!

461

dayasiri-jayasekara-upfa

விளை­யாட்டுத்துறை சார்ந்த பிரச்­சினை­க­ளுக்­கான தீர்­வினை முன்­வைக்க அதி­கார சபை ஒன்றை ஸ்தாபிக்க உத்­தே­சித்­துள்­ள­தாக விளை­யாட்டுத்துறை அமைச் சர் தயா­சிறி ஜய­சே­கர தெரிவித்தார். ஒலிம்பிக் பதக்கம் என்­பது எமது நாட்டை பொறுத்­த­வரை கன­வா­கவே அமைந்­துள்­ள­தா­கவும் அதனை நன­வாக்­கு­வ­தற்கும் பிர­தேச கிராம ரீதி­யி­லான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­தி­ப்பி­லேயே விளை­யாட்டுத் துறை அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

விளை­யாட்டுத்துறை சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை முன்­வைக்­கவும் தேசிய ரீதி­யி­லான சட்­ட­திட்­டங்­களை உரிய முறையில் பின்­பற்­றவும் எதிர்­வரும் காலங்­களில் அதி­கார சபை ஒன்றை ஸ்தாபிக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. மறு­புறம் விளை­யாட்டுத் துறை சார்ந்த குழுக்­களின் அங்­கத்­த­வர்­களை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் ஒன்­றுக்கும் செல்­ல­வுள்ளோம்.

ஒலிம்பிக் பதக்கம் என்­பது இலங்­கையை பொறுத்­த­வரை கன­வா­கவே காணப்ப­டு­கின்­றது அந்­த­வ­கையில் அந்தக் கனவை நன­வாக்கும் முக­மா­கவும் பல்­வேறு செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இது தொடர்பில் தேசிய ஒலிம்பிக் குழு­மத்தின் தலை­வ­ருடன் நாம் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எதிர்­வரும் காலங்­களில் விளை­யாட்டுத்துறை சார்ந்த அனைத்து பிரச்சி­னை­களும் தீர்க்­கப்­ப­டுவ­தோடு பிர தேச கிராம மட்டங்களில் இருந்து சகலதுறைசார்ந்த விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அவர்களின் திறமை களை முன்வைப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.