வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் இளைஞர் குழு கைது!!

457

arrests

வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்தியில் நின்று சண்டையிட்ட குழுவொன்றை கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இளைஞர்களின் ரவுடித்தனம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏ9 வீதியில் தடிகள், பொல்லுகள் மற்றும் வாள்களுடன் நின்று சண்டையிட்ட இளைஞர் குழுவைச் சேர்ந்த 7 பேரை நேற்று முன்தினம் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களுள் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை பொலிஸார் தேடிவருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா, கற்குழி பகுதியில் சகோரர்களுக்கிடையில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று மாலை முச்சக்கரவண்டியொன்றில் வாள்களைக் கொண்டு சென்ற சாரதியொருவரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.