ஆபாச இணையத்தளங்களை தடை செய்ய கோரி கையெழுத்து வேட்டை!!

512

online

ஆபாச இணையத் தளங்களை தடை செய்ய கோரி, பொது மக்களிடம் கையெழுத்து பெறும் வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என, ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்கச் சபை தெரிவித்துள்ளது.

சிறுவருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றங்கள் பல பெருகிவர இதுவும் காரணம் என, அந்த சபையின் செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹீல் டோல் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குறித்த மனுவில் மக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் நவம்பர் 4ம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை இடம்பெறவுள்ளன.

கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதனையடுத்து குறித்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.