வடமகாண விளையாட்டுப்போட்டி நேற்று (31.10.2015) வவுனியா கல்வியற்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
இவ் விளையாட்டுப் போட்டியை வடமாகாண சபையின் முதலமைச்சர் திரு C.V.விக்கினேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, M.P.நடராஜ், G.T.லிங்கநாதன், தர்மபாலசெனவிரட்ண, வவுனியா கல்வியற்கல்லூரி பீடாதிபதி, வடமகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.