பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி!!

399

SL

​மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்­கெ­தி­ரான முத­லா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது.

3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதானத்தில் நேற்று நடந்­தது. இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி முதலில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியை துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு பணித்­தது.

பிற்­பகல் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வி­ருந்த நேற்­றைய போட்டி மழை கார­ண­மாக சற்று பிந்­தியே ஆரம்­ப­மா­னது. அதன்­படி மேற்கிந்­தியத் தீவு­களின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்­க­ளாக பிளட்சர் மற்றும் சார்லஸ் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த இரு­வ­ரையும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லக்மால் வீழ்த்­தினார்.

இந்த இரு­வரும் முறையே 3 மற்றும் ஒரு ஓட்­டத்­துடன் வெளியே­றினர். அதன்­பி­றகு ஜோடி­சேர்ந்த பிராவோ மற்றும் சாமு­வெல்­சையும் பிரித்தார் லக்மால். இதில் சாமுவெல்ஸ் 2 ஓட்­டத்­துடன் ஆட்ட­மி­ழந்தார்.

மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 40 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்க மழை குறுக்­கிட்­டது. இதனால் போட்டி நீண்ட நேரத்­திற்கு இடை நிறுத்திவைக்­கப்­பட்­டது. மீண்டும் 26 ஓவர்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு போட்டி 8.30 மணிக்கு ஆரம்ப­மா­னது.

அதன்­ பின்னர் அதி­ர­டி­யாக ஆடிய பிராவோ 38 ஓட்­டங்­க­ளு­டனும் ரசல் 41 ஓட்­டங்­க­ளு­டனும் அணித் தலைவர் ஹோல்டர் 36 ஓட்டங்­க­ளையும் பெற்று ஆட்­ட­மி­ழந்­தனர்.

நிர்­ண­யிக்­கப்­பட்ட 26 ஓவர்கள் நிறைவில் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணி 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 159 ஓட்­டங்­களைப் பெற்றுக்கொண்­டது.

பந்­து­வீச்சில் அசத்­திய சுரங்க லக்மால் 3 விக்­கெட்­டுக்­க­ளையும் அசந்த மெண்டிஸ் 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர். இலங்கை அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்­படி 26 ஓவர்­க­ளுக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான டில்ஷான் மற்றும் குசல் ஆகி­யோரின் அதிரடியில் இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான ஓட்டச் சேர்க்­கையைப் பெற்­றுக்­கொண்­டது.
அதன்­பி­றகு குசல் பெரேரா 14 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க டில்ஷான் அதி­ர­டி­யாக ஆடி 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்­ஸர்கள் அடங்­கலாக 59 ஓட்­டங்­களை விளா­சினார்.

அதன்­ பின்னர் திரி­மன்ன (17), மெத்­தியூஸ் (13), குண­தி­லக்க (12), சிறி­வர்­தன (7), ஜசூ­ரிய (0) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் அடுத்­த­டுத்து இலங்கை அணி வெற்­றி­பெ­றுமா என்ற சந்­தேகம் எழுந்­தது.

இறு­தியில் அஜந்த மெண்டிஸ் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் கிடைத்த ப்ரீ ஹிட்டைப் பயன்படுத்திக்கொண்ட அஜந்த மெண்டிஸ் சிக்ஸர் ஒன்றை விளாசி இலங்கைக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

அஜந்த மெண்டிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.