இன்று (02.11.2015) காலை 8.45 மணியளவில் A9 வீதி கனகராயன்குளத்திற்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கயஸ் ரக வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இவ் வாகனம் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இவ் விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குஉள்ளானது. இவ் விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-படங்கள் சிந்து & தீபன்-