வவுனியா வர்த்தக சங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது!

955

vavunia_welcome_009

வவுனியா வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையுடன் நில்லாமல், நாடளாவிய ரீதியில் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் நேற்று (02.11.2015) திங்கட்கிழமை நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்க ஒழுங்கு செய்யபட்டிருந்த நிகழ்வில் பட்டியலிட்டுக்காட்டினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உடனடியாகவே அப்போதைய அரச அதிபராக இருந்த கே.கணேஷ் அவர்களைத் தொடர்புகொண்டு, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உதவியதாகவும்,

இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இருந்த மக்களுக்கு அவசர உதவிகளை அரச செயலகத்தின் ஊடாக வழங்கியதாகவும், தொடர்ச்சியாக முப்பது நாட்கள் சமைத்த உணவினை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும், மலையகத்தில் கடந்த வருடம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்தை மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று வழங்கி, அத்தியாவசிய உதவிகளை வழங்கியதாகவும்தமக்கென ஒரு நிரந்தர கட்டிடம் இல்லாத வேளையிலும் வர்த்தகர்கள் அங்காங்கே கூடி மேற்படி சமூகசேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

-பிரதேச நிருபர்-