உயர்தர செயன்முறை பரீட்சை 7 ஆம் திகதி!!

972

3933601401788485487e2

உயர்தரப் பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை வருகின்ற சனிக்கிழமை 07 ஆம் திகதி நடைப்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த செயன்முறைப் பரீட்சைக்கு சுமார் 5074 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். விண்ணப்பித்த பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை அவர் அவரது பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்ப அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று வரையில் அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் 011 2784208 / 011-2784537 / 011 3188850 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.