இனமதமொழி பேதமின்றி தமிழ்,முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒன்றுபடுவோம்! ரிசாட்!!

490

12208210_1097325850287367_1213917367_n

நேற்று (02.11.2015) வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா  வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வேளையில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில்  வாணிப அமைச்சர்  ரிசாட் பதியுதீன் அவர்கள் இன மத மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும்  வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு வடக்கில் தமிழ் மற்றும்  முஸ்லிம் மக்களின்  மீள் குடியேற்றம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது  மீள்குடியேற்ற  அமைச்சராக இருந்த பொழுது நாலரை வருடங்கள் யுத்தத்துடன் நிறைவடைய  மிகுதி ஆறுமாத காலப்பகுதியில் மெனிக்பாம் முகாம்களில் இருந்த தமிழ் மக்களை தான் குடியேற்ற அரும்பாடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதிலும், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும்எனவும்  குறிப்பிட்டார் .

.