வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலாலய நிர்மாண அடிக்கல் நாட்டும் கிரிகைகள் நேற்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆலயத்தின் பிரதம குருக்கள் திரு.கிஸ்ணபவன், பரிபாலனசபை தலைவர் திரு.இ.குகதாசன், திரு.இ.சபேசன், திரு.கு.மகேந்திரன் மற்றும் பக்த்த அடியார்களும் கலந்து ஆரம்பித்து வைத்தனர்.
அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய துணைத்தூதுவர், யாழ்ப்பாண அலுவலகர் திரு.ஆ.நடராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், சி.சிவமோகன், வடமாகணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன், கரைதுரைப்பற்று பிரதேச செயளாளர் திரு.தினேஸ்குமார், அரசாங்க அதிபர் பிரதிநிதி திருமதி பவாணி, திட்டப்பணிப்பாளர் கச்சேரி முல்லைத்தீவு திருமதி உ.முனிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் முந்தியடித்துக் கொண்டு தங்கத்தை போட்டு அடிக்கல்லை நாட்டினார்கள்.