புனரமைக்கப்பட்ட ரட்ணம் பார்க் திறப்பு!!

633

musamilஇலங்கை தேசிய கால்­பந்­தாட்ட அணிக்கு பல தேசிய வீரர்­களை உரு­வாக்கிக் கொடுத்த ரட்ணம் பார்க் கொழும்பு மாந­கர சபை­யினால் புன­ர­மைக்­கப்­பட்டு கொழும்பு மேய­ரினால் அண்­மையில் திறந்­து­வைக்­கப்­பட்­டது. சுமார் ஐந்து வரு­டங்­க­ளாக காடாக காட்­சி­ய­ளித்த இந்த மைதானம் 220 இலட்சம் ரூபா செலவில் புன­ர­மைக்­கப்­பட்டு கொட்­டாஞ்­சேனை மக்­களின் பாவ­னைக்கு மீண்டும் திறந்து வைக்­கப்­பட்­டது.

திறப்பு விழா­வன்று 40 வய­துக்கு மேற்­பட்ட றினோன் அணிக்கும் ரட்ணம், செரெண்டிப் கூட்டு அணிக்கும் இடை­யி­லான கால்­பந்­தாட்டப் போட்­டியும் நடத்­தப்­பட்­டது.இப் போட்டி வெற்றி தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­ததைத் தொடர்ந்து பெனல்டி முறையில் ரட்ணம், செரெண்டிப் கூட்டு அணி வெற்­றி­பெற்­றது.

திறப்பு விழாவில் கொழும்பு மாந­கர பிதா எம். ஜே. எம். முஸம்மில், மாந­கர சபை உறுப்­பினர் எம். ரீ. எம். இக்பால், ஆகியோர் கலந்­து­கொண்­டனர். ரட்ணம், செரெண்டிப், றினோன் ஆகிய கழ­கங்­களின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய குழுவின் மேற்­பார்­வையில் இந்த மைதானம் பரா­ம­ரிக்­கப்­படும்.

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா, இணைக் குழுத் தலைவர் நோபர்ட் பெர்­னாண்டோ, செய­லாளர் டெஸ்மண்ட் ஜோசப், பொரு­ளாளர் ரொய்ஸ்டன் பெர்­னாண்டோ, உதவித் தலைவர் ஹேர்லி சில்­வேரா, றினோன் கழகத் தலைவர் ரொபர்ட் பீரிஸ் ஆகியோர் உட்பட ஏராளமானோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.