கொழும்பில் கடந்த முதலாம் திகதி நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அணியின் தலைவர் என்ற முறையில் ஜாசன் ஹோல்டருக்கு 40 சதவீதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 20 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் போதும் இதே போன்று மெதுவாக பந்து வீசிய பிரச்சினையில் ஜாசன் ஹோல்டர் நடவடிக்கைக்குள்ளானார். ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக இத்தகைய புகாரில் சிக்கி இருப்பதால் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஜாசன் ஹோல்டருக்கு பதிலாக சாமுவேல்ஸ் அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.