பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. முதலில் பலரும் இதை வதந்தி என கூற, அவர்களும் மௌனம் சாதித்தனர்.தற்போது வந்த தகவலின் படி இவர்களுக்கு நவம்பர் 8ம் திகதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாம். இதற்கு பல திரைப்பிபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
டுவிட்டரில் இத்தகவலை கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்தனர். பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் உறுமீன் படத்தில் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது என கூறப்படுகின்றது.