தாடி வளர்ப்பது ஆண்களின் நவநாகரிக செயற்பாடுகள் சார்ந்த ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய இரு ஆய்வுகள் இவ்வாறு தாடி வளர்த்துள்ள ஆண்கள் ஆபாச சிந்தனை மிகுந்தவர்களாகவும் சண்டைகளில் ஈடுபடுவதில் ஆர் வமுள்ளவர்களாகவும் தமது மனைவியையும் காதலியையும் ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் செய்பவர்களாகவும் திருடுபவர்களாகவும் உள்ள தாக தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுகளானது வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இணையத்தள ஆய்வு மென்பொருளை வழங்கும் குவால்ட்றிக்ஸ் நிறுவனத்தால் இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள 18 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 500 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளில் 86 சதவீத இந்திய ஆண்களும் 65 சதவீத அமெரிக்க ஆண்களும் முகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் முடியைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி ஆய்வுகளில் பங்கேற்ற தாடி வைத்துள்ளவர்கள் முகத்தில் எதுவித முடியையும் கொண்டிராதவர்களுடன் ஒப்பிடுகையில் ஆபாசமான கூற்றுகளுக்கு இணக்கப்பாடுடையவர்களாக இருந்ததாக தெரிவிக்கும் இந்த ஆய்வுகளில் பங்கேற்ற ஆய்வாளர்கள், தமது ஆய் வுகள் தாடிக்கும் பாலின வகிபாக நம்பிக்கைகளுக்கும் தொடர்பு இருப் பதை காண்பிப்பதாக உள்ளன எனவும், ஆனால் இந்தத் தொடர்புக்கான சரியான காரணத்தை அறியமுடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.