வவுனியா பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் வெடிகுண்டுகள் இருப்தாகத் தெரிவித்து தேடுதல் நடவடிக்கையை வவுனியா பொலிசார் இன்று (04.11) மேற்கொண்டனர்
பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றையடுத்து இத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இத்தேடுதல் நடவடிக்கைக்காக வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியை பொலிசார் கோரிப்பெறப்பட்டபின்னர் இன்று காலை முதல் மதியம் வரை தேடுதல் மயானத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டது, இத்தேடுதலுக்காக நகரசபையின் டோசர் பயன்படுத்தப்பட்டது.
இத்தேடுதலையொட்டி பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.