உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 9வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஃபொர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக அளவில் சக்தி வாய்ந்த பத்து நபர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது 6 இடங்கள் முன்னேறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. ஜெர்மன் தலைவி ஏஞ்சலா மெர்கல் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். மோடி பற்றி அந்த பத்திரிகையில் குறிப்பிடுகையில், ‘மக்களின் மனம் கவர்ந்த பிரதமர் மோடி, தனது முதலாமாண்டு பதவிக்காலத்திலேயே 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளார்.
அமெரிக்க, சீன அதிபர்களுடனான சந்திப்பின்போது, உலக தலைவராக தன்னை உயர்த்திக்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.