குடிபோதையிலிருந்த கணவரை அச்சுறுத்த வேடிக்கையாக துப்பாக்கியால் குறிபார்த்த மனைவி!!

447

gun-firingகுடி­போ­தை­யி­லி­ருந்த தனது கண­வரை நோக்கி வேடிக்­கை­யாக துப்­பாக்­கியைத் தூக் கிப் பிடித்த மனைவி தவ­று­த­லாக அவரை சுட்டுக் கொன்ற விப­ரீத சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஹெர்­மொ­ஸில்லோ எனும் இடத்தைச் சேர்ந்த ரோஸா இஸெலா கொன்­ரெராஸ் லெயிவா (41 வயது) என்ற மேற்­படி பெண் குடி­போ­தை­யி­லி­ருந்த தனது கண­வ­ரான அப்டெல் தரோங்கோ அவி­தாவை (54 வயது) வேடிக்­கை­யாக அச்­சு­றுத்தும் வகையில் அவ­ரது மார்பை நோக்கி துப்­பாக்­கியை தூக்கிப் பிடித்­துள்ளார்.

இதன்போது அவ­ரது விரல் துப்­பாக்கி விசையை தவ­று­த­லாக அழுத்­தி­யதால் துப்­பாக்கி வெடித்து அவர் உயி­ரி­ழந்­துள் ளார். தனது கணவர் அந்தத் துப்­பாக்­கியை ரவைகள் நிரப்­பப்­ப­டாத நிலையில் வைத்­தி­ருப்­பது வழமை என்­பதால் அதில் ரவைகள் நிர­ப்பப்­பட்­டுள்­ளதை அறி­யாது தான் அதனை அலட்சியமாக கையாண்டதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாக லெயிவா தெரிவித்தார்.