குடிபோதையிலிருந்த தனது கணவரை நோக்கி வேடிக்கையாக துப்பாக்கியைத் தூக் கிப் பிடித்த மனைவி தவறுதலாக அவரை சுட்டுக் கொன்ற விபரீத சம்பவம் மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது.
ஹெர்மொஸில்லோ எனும் இடத்தைச் சேர்ந்த ரோஸா இஸெலா கொன்ரெராஸ் லெயிவா (41 வயது) என்ற மேற்படி பெண் குடிபோதையிலிருந்த தனது கணவரான அப்டெல் தரோங்கோ அவிதாவை (54 வயது) வேடிக்கையாக அச்சுறுத்தும் வகையில் அவரது மார்பை நோக்கி துப்பாக்கியை தூக்கிப் பிடித்துள்ளார்.
இதன்போது அவரது விரல் துப்பாக்கி விசையை தவறுதலாக அழுத்தியதால் துப்பாக்கி வெடித்து அவர் உயிரிழந்துள் ளார். தனது கணவர் அந்தத் துப்பாக்கியை ரவைகள் நிரப்பப்படாத நிலையில் வைத்திருப்பது வழமை என்பதால் அதில் ரவைகள் நிரப்பப்பட்டுள்ளதை அறியாது தான் அதனை அலட்சியமாக கையாண்டதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாக லெயிவா தெரிவித்தார்.