வவுனியா நெடுங்கேணி – நைனாமடு பகுதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து கடைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
நைனாமடு – கரப்புக்குத்தி வீதிக்கு அருகாமையில் இருந்த தேனீர்க்கடை ஒன்றையும் இரண்டு பலசரக்கு கடைகளினதும் சுவர்களை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக கடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சேதவிபரங்களை பதிவு செய்துள்ளனர்.இதேவேளை தொடர்ச்சியாக இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.