சூர்யாவின் கதையை மாற்றிய லிங்குசாமி!!

421

surya

சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவர் அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்து விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் அப்படியே.

சூர்யா முதலில் கெளதம் மேனன், லிங்குசாமி ஆகிய இருவரின் படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். முதலில் துப்பறியும் ஆனந்த் படத்திற்கே ஒரு வருட காலம் உடலமைப்புக்காக சூர்யா நிறைய உழைக்க வேண்டியது இருந்ததால் கெளதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தினைத் தொடங்கினார்.

ஆனால், அவரோ முழுமையான திரைக்கதை வடிவத்தினை சூர்யாவிடம் கொடுக்கவில்லை. ஆகையால் சூர்யாவோ துருவ நட்சத்திரம் படத்தில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி லிங்குசாமி தனது கதைக்கு வேகமாக திரைக்கதை வடிவம் கொடுக்க ஆரம்பித்தார். அதற்குள் சீமான் வடிவத்தில் சிக்கல் வந்தது.

கட்சிப் பணிகளுக்கு இடையே சீமான் தனது பகலவன் கதையினை விஜய், ஜீவா, ஜெயம் ரவி என அனைவரிடம் கூறி வந்தார். ஜுன் 2014-ல் தான் எனது தேதிகள் இருக்கிறது. அதுவரை காத்து இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக நான் நடிக்கத் தயார் என்று கூறிவிட்டாராம் ஜெயம் ரவி.

பகலவன் கதையினைத் தான் அப்படியே லிங்குசாமி தயார் செய்திருந்தாராம். இதனைக் கேள்விப்பட்ட சீமான் இயக்குநர் சங்கத்தில் புகார் அளிக்க, மீண்டும் பிரச்னை வெடித்தது. இருவரும் தங்களது கதையினைக் கூறவே பிரதி எடுத்தது போல அப்படியே இருந்ததாம்.

இதனால் நான் இந்தக் கதையினை சூர்யாவை வைத்து இயக்கவில்லை. வேறு ஒரு கதை வைத்திருக்கிறேன். அதனை இயக்கிக் கொள்கிறேன் என்று கூறி விட்டாராம் லிங்குசாமி.

தற்போது கதைக்கு, திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றது லிங்குசாமி அலுவலகம். கதையும் சூர்யாவிற்குப் பிடித்து விட்டதால் அடுத்த மாதம் 27ம் தேதியில் இருந்து திகதிகள் ஒதுக்கி கொடுத்து விட்டார்.

தற்போதைய நிலவரப்படி கெளதம் மேனன், ராஜேஷ், சூது கவ்வும் நலன் குமாரசாமி, சுராஜ் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சூர்யாவை இயக்க இருப்பது லிங்குசாமி மட்டுமே!