201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா!!

357

979643இந்­திய  தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட்போட்டி இந்­தியா மொஹா­லியில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­திய அணி 201 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

தென்­னா­பி­ரிக்க அணியின் பகுதி நேர பந்து வீச்­சா­ள­ரான எல்­க­ரிடம் தடு­மா­றிய இந்­தி­யாவின் முன்­னணி துடுப்­பாட்ட வீரர்கள் சர­ண­டைந்­து­விட்­டனர். இவர் மொத்தம் 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி அசத்­தினார்.

இந்­திய அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான முரளி விஜய் அதி­கூ­டிய ஓட்­டங்­க­ளாக 75 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார். பின்னர் தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த தென்­னா­பி­ரிக்க அணியின் தொடக்க வீரர்­க­ளாக எல்­கரும் வோன்­சைலும் களம் இறங்­கி­னார்கள்.

ஆடு­களம் முதல் நாளி­லேயே சுழற்­பந்­து வீச்சுக்கு ஒத்­து­ழைத்­ததால் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். 5 ஓட்­டங்கள் எடுத்த சைல் அஸ்வின் பந்தில் வெளி­யே­றினார். அடுத்து டூ பிளசிஸ் களம் இறங்­கினார். இவர் ஜடேஜா பந்தில் ஆட்­ட­மி­ழந்தார்.

3-ஆவது விக்­கெட்­டுக்கு எல்­க­ருடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாளில் மேலும் விக்கெட் இழக்­காமல் பார்த்­துக் ­கொண்­டது.தென்­னா­பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்­பிற்கு 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. எல்கர் 13 ஓட்டங்களுடனும்இ அம்லா 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இவ்விரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடர் மற்றும் இருபதுக்கு 20 ஆகியவற்றை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.