இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட்போட்டி இந்தியா மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தென்னாபிரிக்க அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான எல்கரிடம் தடுமாறிய இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சரணடைந்துவிட்டனர். இவர் மொத்தம் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் அதிகூடிய ஓட்டங்களாக 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக எல்கரும் வோன்சைலும் களம் இறங்கினார்கள்.
ஆடுகளம் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததால் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். 5 ஓட்டங்கள் எடுத்த சைல் அஸ்வின் பந்தில் வெளியேறினார். அடுத்து டூ பிளசிஸ் களம் இறங்கினார். இவர் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
3-ஆவது விக்கெட்டுக்கு எல்கருடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாளில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.தென்னாபிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. எல்கர் 13 ஓட்டங்களுடனும்இ அம்லா 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இவ்விரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடர் மற்றும் இருபதுக்கு 20 ஆகியவற்றை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.