62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை!!

417

lockup_500தமிழ் அர­சியல் கைதி­களில் 62 பேரை இரண்டு கட்­டங்­க­ளாக பிணையில் விடு­விப்­பது என்றும் ஏனை­ய­வர்­களின் விடு­தலை குறித்து அமைச்­ச­ரவைக் குழு­வொன்­றினை அமைத்து ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­பது என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற உயர்­மட்டக் குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­க­ப்பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக ஆராயும் உயர்­மட்டக் கூட்டம் நேற்று மாலை நடை­பெற்­றது.

இந்தக் கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ, புனர் வாழ்வு மீள் குடி­யேற்ற அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன், தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் வெளிவிவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, கூட்­ட­மைப்பு எம்.பிக்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ. சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகி­யோரும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தலை­மை­யி­லான குழு­வி­னரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

பதில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர மற்றும் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகி­யோரும் இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்­றனர்.இந்த கூட்­டத்­தின்­போது தமிழ் அர­சியல் கைதி­களை பொது மன்­னிப்­ப­ளித்து விடு­விக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அர­சியல் கைதிகள் விட­யத்தில் இனியும் இழுத்­த­டிப்புப் போக்கு மேற்­கொள்­ளக்­கூ­டாது. இம்­மாதம் 7ஆம் திக­திக்குள் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. அந்த உறு­தி­மொ­ழியை நிறை­வேற்ற வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்.

அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு அளிப்­பது கடி­ன­மாக உள்­ளது. அதனால் கட்டம் கட்­ட­மாக அவர்­க­ளுக்கு பிணை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கலாம் என்று அரச தரப்பில் கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது தெகி­வளை குண்டுத் தாக்­குதல் உட்­பட பாரிய குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வது கடி­ன­மாகும் என்று சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சார்பில் கலந்­து­கொண்ட அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அர­சியல் கைதி­களில் 32 பேரை முதற்­கட்­ட­மாக பிணையில் விடு­தலை செய்­வது என்றும் இரண்டாம் கட்­ட­மாக 30 பேரை பிணையில் விடு­விப்­பது என்றம் ஏனை­ய­வர்கள் விடயம் தொடர்பில் அமைச்­ச­ரவை உப­கு­ழுவை அமைத்து ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றும் இந்தக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

குற்­ற­வா­ளி­க­ளா­ககக் கரு­தப்­பட்டு நீதி­மன்­றத்­தினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­ட­வர்கள் விட­யத்தில் அர­சாங்­க­மா­னது எத்­த­கைய நட­வ­டிக்­கை­யி­னையும் எடுக்க முடி­யாது. ஜனா­தி­ப­தியே இவ்­வி­ட­யத்தில் முடி­வு­செய்ய வேண்டும் என்றும் இந்தக் கூட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சி­யல்­கை­தி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவானது கடந்த மாதம் 19ஆம் திகதி முதல்தடவையாக கூடி ஆராய்ந்திருந்தது. கடந்த மாதம் 26ஆம் திகதி இரண்டாவது கூட்டம் இடம்பெற்றிருந்தது. நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற மூன்றாவது கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.