பிரேசில் நாட்டை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடுவீதியில் விரட்டி விரட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான சிசிடீவி காணொளி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமுற்ற பொலிஸ் அதிகாரி மனைவியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் 11 முறை அவர் மனைவியை துப்பக்கியால் சுட்டு உள்ளார். பிரேசில் நாட்டில் உபேர்லாந்தியா நகரில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
காரில் இருந்து இறங்கிய மனைவி தப்பி ஓடும் போதும் அந்த பொலிஸ் அதிகாரி விடாமல் துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்டுக கொன்றுள்ளார். இந்த சம்பவத்தில் பலியான பெண் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.