தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் வெள்ளை நைல் நதிப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 41 பேரும் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கிடையே ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.