வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் விஞ்ஞான தினவிழா இன்று (06.11.2015) காலை நடைபெற்றது.
இவ் விழாவில் வட மாகாண சபை உறுப்பினர் G.Tலிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராசா, M.P.நடராஜ் மற்றும் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், மற்றும் விஞ்ஞான பாடசம்மந்தப்பட்ட ஆலோசகர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இவ் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் G.T.லிங்கநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் ரூபா 50,000 வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் விழாவில் தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலையில் முதலிடம் பெற்ற மாணவி கவிநிலாவிற்கு சான்றிதழும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.