நடிகர் சங்க பொது செயாலளர் பதவியை ஏற்ற பிறகு விஷால் பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் காவிரி பிரச்சனைக்கு தான் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது என கூறினார்.
இதை எதிரித்து தமிழகத்தின் வளர்ந்து வரும் கட்சி ஒன்று விஷால் வீடு முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.மேலும் அவர்கள் விஷால் உருவபொம்மையை எரிக்க, காவல்துறையினர் உடனே அதை தடுத்து நிறுத்தி, 50 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.