நல்லாட்சியிற்கு வித்திட்ட மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்!!

702

Sobitha

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவரது உடலை இன்று காலை 09.15 அளவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்னாரது இறுதிக் கிரியைகளை பூரண அரசு மரியாதையுடன் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.