இலங்கை- மேற்கிந்தியத்தீவு இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் மாற்றம்!!

234

SL

இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவிருந்த இருபது கிரிக்கட் போட்டி எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ளது.

கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித்த தேரரின் மறைவையொட்டி அன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அன்றைய தினம் இடம்பெறவிருந்த போட்டி அதற்கு முன்னைய நாள் 11ம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.