நடிகர் அஜித் ரசிகர்களால் போர்க்களமாக மாறிய மதுரை!!

768

Ajith

தீபாவளித் தினமான இன்று மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவங்களால் மதுரையில் உள்ள திரைஅரங்குகள் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

நடிகர் அஜித்குமாரின் வேதாளம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. திரைஅரங்குகளில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் படத்துக்கு இரத்தத்தால் ரசிகர்கள் அபிஷேகம் செய்தனர்.

அதேநேரம் சில திரையரங்குகளில் படம் ஒளிபரப்ப தாமதம் ஆனதால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கினர்.

இதில் 4 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும், பேருந்தில் ஏறிய ரசிகர்கள் வெடிகளை வெடித்தனர். இதனால் பயணிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.