வவுனியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியா பிரமானங்குளம் பகுதியில் வீட்டொன்றில் ஏற்றிவைத்த விளக்கு தீடிரென தீப்பற்றியுள்ளது இதன்போது வீட்டில் இருந்த சுரேஸ்ராஜா என்பவர் காயமடைந்துள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.