வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தில் இன்று(10.11.2015) நரகாசூர சம்ஹாரம் சிறப்பாக இடம் பெற்றது.தீபாவளி அன்று வைணவ ஆலயங்களில் நரகாசூரன் போர் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டு நரகாசுரன் போர் பக்தி பூர்வமாய் இடம்பெற துணை புரிந்தனர்.சிறுவர்களும் நரகாசுரனுக்கு பக்கபலமாக அசுரர்கள் போன்று வலம்வந்த நிகழ்வும் இடம்பெற்றது .