மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் யுவதி ஒருவரும் இன்னொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை, வெவஹமந்துவை பிரதேசத்தில் டீ56 ரக துப்பாக்கியால் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரும் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை, வெவஹமந்துவை பிரதேசத்தில் வசிக்ககூடிய 26 வயதுடைய யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கோட்டேகொடை, பாதேகம பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் என்பதுடன், தங்காளை, கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த டீ56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.