புகையிரத மிதிபலகையில் பயணிப்பவர்கள் இனி கவனம்!!

909

Train

புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக அந்த திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

புகையிரதம் பயணிக்கும் வேளைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.