கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றோர் கலாநிதி எனப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்!!

741

PhD

கௌரவ கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்கள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் ‘கௌர­வ’ என்ற சொற்ப­த­மின்றி கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வதை தடை­செய்ய வேண்­டு­மென புத்­தி­ஜீ­விகள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இது குறித்து புத்­தி­ஜீ­விகள் குறிப்­பி­டு­வ­தா­வது,

நாட்டில் போலி டாக்­டர்கள் போன்று போலிக் கலா­நி­தி­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ளது. அரச அல்­லது தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குச் சென்று இள­மாணி, முது­மாணி கற்­கை­நெ­றி­களைப் பூர்த்தி செய்து பட்­டங்­களைப் பெற்ற பின் சொற்ப எண்­ணிக்­கை­யி­லானோர் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து தங்­க­ளது துறைசார் துறை­களில் கலா­நிதி கற்கை நெறியைப் பூர்த்தி செய்து கலா­நிதிப் பட்­டங்­களைப் பெறு­கின்­றனர்.

இவ்­வாறு கலா­நிதி கற்­கையைப் பூர்த்தி செய்து பட்­டங்­களைப் பெறு­கின்­ற­வர்கள்; தங்­க­ளது பெயர்களுக்கு முன்னால் கலா­நிதி எனப் பயன்­ப­டுத்தி வரு­கையில், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத நிறு­வ­னங்­க­ளினால் கௌர­வத்­திற்­காக வழங்­கப்­ப­டு­கின்ற கௌரவ கலா­நிதிப் பட்­டத்தை, துறைசார் கலா­நி­திகள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கலா­நிதி எனப் பயன்படுத்துவது போன்று, கௌரவ கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்­களும் கலா­நிதி எனப் பயன்படுத்துவது உண்­மை­யான கலா­நிதிப் பட்­டம் பெற்­ற­வர்­களின் தியா­கத்­தையும் முயற்சியையும் சாத­னை­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும்.

அத்­துடன், கௌரவ கலா­நி­திகள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கௌரவம் என்ற பதத்தைத் தவிர்த்து கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வது ஒரு­வ­கையில் சாதா­ரண பொது­மக்­களை ஏமாற்றும் செய­லா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய நிலை­மை­களைக் கருத்­திற்­கொண்டு, கௌரவ கலா­நிதிச் சான்­றி­தழ்­களைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் அவர்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கௌரவ கலா­நிதி என்று பயன்­ப­டுத்­து­வதை உறுதி செய்­யவும் அவ்­வாறு பயன்­ப­டுத்­தா­த­வர்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கவும் உயர்­கல்வி அமைச்சும் பொது ­நிர்­வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சும் முன்­வர வேண்டும்.

அவ்­வா­றான நட­வ­டிக்கை பல்­வேறு சாவல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து கால நேரங்­களை விரயம் செய்து உரிய கல்வி நிறு­வ­னங்­களில் கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்­களைக் கௌரப்­ப­டுத்­து­வ­தாக அமை­யு­மெ­னவும் குறிப்பிடுகின்ற புத்திஜீவிகள், இவ்விடயத்தில் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் உண்மை நிலையைக் கருத்திற்கொண்டு, கலாநிதிப் பட்டம் எத்தகையது என்பதை உறுதி செய்து அவற்றை செய்திகளின்போது வெளிப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.