இலங்கைச் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யக் கோரி தீபாவளித் திருநாள் கறுப்பு தீபாவளியாக கடைப்பிடிக்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று 10.11.2015 அன்று காலை 9.30 மணிக்கு கற்குளியில் சிறப்பாக நடைபெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கருத்துரைகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்திஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராஜா, G.T.லிங்கநாதன், இ.இந்திரராசா , அவர்களும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கோபி ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாண சபை உறுப்பினர்கள் கிராம அமைப்பின் பிரதி நிதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.