வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 12.11.2015 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஆரம்பமாகிய கந்த சஷ்டி விரதம் ஸ்நாபன அபிசேகத்தை தொடர்ந்து வசந்த மண்டப பெருமானுக்கு விசேட சண்முக அர்ச்சனையுடன் எம்பெருமான் உள்வீதியாக எழுந்தருளி வந்து அருள்பாளித்தார்.
இன்றைய உற்சவத்தில் விரதமிருக்கும் அடியார்கள் தர்ப்பை அணிந்து கும்பத்துக்கு பூ போடும் நிகழ்வும் இடம்பெற்றது . கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தினமும் மதியம் 1.30 மணியளவில் விசேட அபிசேகம் ஆரம்பமாகி தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று ஆறாம் நாள் மாலை 4.00 மணியளவில் மலையடிவாரத்தில் சூரசம்கார நிகழ்வு இடம்பெறும்.
-ஈழத்து பழனி முருகன் ஆலய நிர்வாகம்-